பல நூற்றாண்டுகளுக்கு முன் மேல் நாடுகள் இந்தியாவைக் கண்டுபிடித்தபின், மேல்நாட்டு நம்பிக்கைகளுக்கும் பண்புகளுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. இந்தியா கடந்த 50,000 வருடங்களுக்கு முன்பான சரித்ரதையே கூற ஆரம்பித்தது என்பது பெரிய அதிர்ச்சி. அதை மேல் நாட்டு அறிஞர்கள் ஒப்புகொள்வதில் கஷ்டப்பட்டார்கள்.
ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்தவரை உலக நாகரிகமும் தோன்றியதெல்லாம் சுமார் 1,500 BC க்கு முன்புதான். எனவே அவர்கள் என்ன செய்தார்கள் ? பலவித சப்பைக் கட்டான கதைகளை கற்பித்து, அதெல்லாம் ஒன்றும் இல்லை; '50,000 ஆண்டுகளாவது' என்பது போல ஆரம்பித்தார்கள். ஆனாலும் உண்மை நிலை உணர்ந்தவர்கள் இந்தியப் பண்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தனிப் பகுதியை (Bolden Chair ) உண்டாக்கினார்கள்.
இதனால் என்ன நேர்ந்தது ?
சமஸ்க்ருதத்தில் பைபிளை மொழி பெயர்க்க வேண்டும் என்று இத் துறையில் பல பேர் நுழைந்தார்கள். அப்படிச் செய்யும் போது அவர்கள் வேதங்களைக் கற்றுக் கொள்ள நேர்ந்தது, கிரேக்கம லத்தின் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கு சமஸ்கிருதம் தான் தாய்மொழியாக இருந்தது என்பதை கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள். எனினும், இந்தியாவுக்கு இந்த நன்மதிப்பைக் கொடுக்கூடாது என்று அவர்கள் எண்ணினார்கள். 'தங்களைவிட மேம்பட்டப் பண்பாடு கீழை நாட்டில் இருந்தது', என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.
இதற்க்கு ஒரு வழி செய்தார்கள்
ஆரியர்கள் என்று ஒரு புது இனத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் ரஷ்யா அருகில் வாழ்ந்தார்கள் என்றும்; குதிரைகள் மீது ஏறி இந்தியாவுக்குள் 1500 வருடங்ககளுக்கு முன்னர் வந்தார்கள் என்றும்; அவர்கள்தான் வேதங்களைக் கொண்டு வந்தார்கள் என்றும், வாய் கூசாமல் கூற ஆரம்பித்தார்கள். ஆனால், சீக்கிரமே இவர்களுக்குப் புதுத் தலைவலி ஒன்று வந்து சேர்ந்தது. வேதங்களில் குறிப்பிட்டு இருக்கும் வானவியல் கணக்குகளை அவர்கள் பார்க்கும் போது அவை 7000 வருடங்களுக்கு முன் செல்வதை கண்டுணர்தனர். இதை நிச்சயமாக மறுக்க முடியாதே. இதற்க்கு என்ன செய்வது என்று கஷ்டபட்டர்கள். பின்னாளில் இந்த ஆரியர் கொள்கையைப் பற்றிய பல மேல்நாட்டுக்காரர்கள் பல அர்த்தங்களில் கூற ஆரம்பித்தார்கள். ஆனால் இதற்க்கெல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு வந்தது. சமிப காலங்களில் பல புதுப்புது சம்பவங்கள் நிகழ்ந்தன. புதிய கண்டுபிடிப்புகள் வெளியாயின.
'கங்கை நதியோடு, சரஸ்வதி என்ற ஒரு ஆறு இருந்தது உண்மை' என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். அந்த கணக்குப்படி பார்த்தல் சரஸ்வதி நதி 10,000 வருடங்களுக்கு முன்னர் வறண்டு விட்டது என்பதையும் கனகிட்டர்கள். இதைத் தவிர அகழ்வாரயிச்சி நிபுணர்கள் தான் ஆராய்ச்சி மூலம் வேறு நாட்டிலிருந்து ஆரியர்கள் வரவில்லை என்பதை கண்டுபிடித்தார்கள்.
1,500 BC க்கு முன்பே இந்தியா ஒரு நாகரிகம் அடைந்த பூமி என்றும் அறிந்தார்கள். 5,000 வருடங்களுக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள், மகாபாரதத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த மகாபாரதத்தின் முடிவுதான் கலியுகத்தின் ஆரம்பம் என்றும் கூறபடுகிறது.
எனவே வேதங்கள் குறிப்பிடும் சமஸ்கிருத மொழி ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து வந்து இருக்கின்றது என்பது தெரிகின்றது.
நன்றி , சனாதான தர்மம்.