Wednesday, July 24, 2013

யார் வந்தேறி?


யார் வந்தேறி?


பல நூற்றாண்டுகளுக்கு முன் மேல் நாடுகள் இந்தியாவைக் கண்டுபிடித்தபின், மேல்நாட்டு நம்பிக்கைகளுக்கும் பண்புகளுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. இந்தியா கடந்த 50,000 வருடங்களுக்கு முன்பான சரித்ரதையே கூற ஆரம்பித்தது என்பது பெரிய அதிர்ச்சி. அதை மேல் நாட்டு அறிஞர்கள் ஒப்புகொள்வதில் கஷ்டப்பட்டார்கள்.



ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்தவரை உலக நாகரிகமும் தோன்றியதெல்லாம் சுமார் 1,500 BC க்கு முன்புதான். எனவே அவர்கள் என்ன செய்தார்கள் ? பலவித சப்பைக் கட்டான கதைகளை கற்பித்து, அதெல்லாம் ஒன்றும் இல்லை; '50,000 ஆண்டுகளாவது' என்பது போல ஆரம்பித்தார்கள். ஆனாலும் உண்மை நிலை உணர்ந்தவர்கள் இந்தியப் பண்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தனிப் பகுதியை (Bolden Chair ) உண்டாக்கினார்கள்.

இதனால் என்ன நேர்ந்தது ?


 சமஸ்க்ருதத்தில் பைபிளை மொழி பெயர்க்க வேண்டும் என்று இத் துறையில் பல பேர் நுழைந்தார்கள். அப்படிச் செய்யும் போது அவர்கள் வேதங்களைக் கற்றுக் கொள்ள நேர்ந்தது, கிரேக்கம லத்தின் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கு சமஸ்கிருதம் தான் தாய்மொழியாக இருந்தது என்பதை கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள். எனினும், இந்தியாவுக்கு இந்த நன்மதிப்பைக் கொடுக்கூடாது என்று அவர்கள் எண்ணினார்கள். 'தங்களைவிட மேம்பட்டப் பண்பாடு கீழை நாட்டில் இருந்தது', என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை.

இதற்க்கு ஒரு வழி செய்தார்கள்

ஆரியர்கள் என்று ஒரு புது இனத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் ரஷ்யா அருகில் வாழ்ந்தார்கள் என்றும்; குதிரைகள் மீது ஏறி இந்தியாவுக்குள் 1500 வருடங்ககளுக்கு முன்னர் வந்தார்கள் என்றும்; அவர்கள்தான் வேதங்களைக் கொண்டு வந்தார்கள் என்றும், வாய் கூசாமல் கூற ஆரம்பித்தார்கள். ஆனால், சீக்கிரமே இவர்களுக்குப் புதுத் தலைவலி ஒன்று வந்து சேர்ந்தது. வேதங்களில் குறிப்பிட்டு இருக்கும் வானவியல் கணக்குகளை அவர்கள் பார்க்கும் போது அவை 7000 வருடங்களுக்கு முன் செல்வதை கண்டுணர்தனர். இதை நிச்சயமாக மறுக்க முடியாதே. இதற்க்கு என்ன செய்வது என்று கஷ்டபட்டர்கள். பின்னாளில் இந்த ஆரியர் கொள்கையைப் பற்றிய பல மேல்நாட்டுக்காரர்கள் பல அர்த்தங்களில் கூற ஆரம்பித்தார்கள். ஆனால் இதற்க்கெல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு வந்தது. சமிப காலங்களில் பல புதுப்புது சம்பவங்கள் நிகழ்ந்தன. புதிய கண்டுபிடிப்புகள் வெளியாயின.


  'கங்கை நதியோடு, சரஸ்வதி என்ற ஒரு ஆறு இருந்தது உண்மை' என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். அந்த கணக்குப்படி பார்த்தல் சரஸ்வதி நதி 10,000 வருடங்களுக்கு முன்னர் வறண்டு விட்டது என்பதையும் கனகிட்டர்கள். இதைத் தவிர அகழ்வாரயிச்சி நிபுணர்கள் தான் ஆராய்ச்சி மூலம் வேறு நாட்டிலிருந்து ஆரியர்கள் வரவில்லை என்பதை கண்டுபிடித்தார்கள்.

1,500 BC க்கு முன்பே இந்தியா ஒரு நாகரிகம் அடைந்த பூமி என்றும் அறிந்தார்கள். 5,000 வருடங்களுக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள், மகாபாரதத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த மகாபாரதத்தின் முடிவுதான் கலியுகத்தின் ஆரம்பம் என்றும் கூறபடுகிறது.
எனவே வேதங்கள் குறிப்பிடும் சமஸ்கிருத மொழி ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து வந்து இருக்கின்றது என்பது தெரிகின்றது.




நன்றி , சனாதான தர்மம்.




Tuesday, July 23, 2013

இது தான் மனிதபிறப்பு

ஏழு தாதுக்கள் என்பது எதனால்?
----------------------
உணவிலிருந்து ரத்தம், ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள்,நரம்பிலிருந்து எலும்புகள்,எலும்பிலிருந்து ஊன்,ஊனிலிருந்து சுக்ரம்,

இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,
சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது.

அதை இயக்குமிடம் இதயம்.இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது.அதில் பித்தமும்,பித்தத்திலிருந்து வாயுவஜம் தோன்றுகிறது.அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது.இது இறைவனின் நீதி.

யஜுர்வேதம்…..கர்ப்போபநிஷத்1.4
 
ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது.

ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.

அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது.

இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில் பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.

ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள் உண்டாகின்றன.

ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.

மனக்கலக்கத்தோடு இருந்தால் குருடர்களாகவும்,முடவர்களாகவும்,கூனர்களாகவும்,குள்ளர்களாகவும் பிறக்கிறார்கள்.ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

யஜுர்வேதம்…..கர்ப்போபநிஷத் 3
 
கர்பத்தில் இருக்கும் போது தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில் பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது.பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன.

அப்போது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும்.பாபச்செயல்களையும் உணர்கிறது.

முன்பு என்னால் ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார் பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான் பாபத்தை போக்குவதும் கருமப் பயனிலிருந்து விடுதலையளிப்பதுமான ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிப்பேன் என்று எண்ணுகிறான்.

பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு நினைவிழந்து முற்பிறவியையோ புண்ணிய பாபச்செயல்களையோ எதையும் அறிவதில்லை.

இது தான் மனிதபிறப்பு

யஜுர்வேதம்…..கர்ப்போபநிஷத் 4
 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள இந்தியர்களின் கண்டுபிடிப்பை பாருங்கள்..